இன்று (05.12.2022) ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 232 உயர்வு.!

சென்னையில் சமீப காலமாக தங்கத்தின் விலையில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். 

பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சற்று அதிகம். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்த வகையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 5,016 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 குறைந்து 40,128 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 29 ரூபாய் உயர்ந்து 5,045 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 232 ரூபாய் உயர்ந்து 40,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 0.90 காசுகள் உயர்ந்து 72.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்றுக்கு 900 ரூபாய் உயர்ந்து 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.