நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையில்தான் அதிமுக போட்டியிடும்: ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி

புதுக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில்தான் அதிமுக போட்டியிடும் என்று ஓபிஎஸ் அணி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: அதிமுக கட்சி மற்றும் ஆட்சி தமிழகத்தில் நூறாண்டு காலம் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதை நோக்கி அதிமுக பயணிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான்.

அவர் தலைமையில் இரட்டை இலை சின்னம் கட்டாயம் எங்களுக்கு தான் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக அங்கம் வகிக்கும். அதிக இடங்களை அதிமுக பிடிக்கும். ஆனால் தலைமை என்பது பாஜக தான். பாஜக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.