மும்பை : ‘மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம், ‘மகிந்திரா லாஸ்ட் மைல் டெலிவரி’ நிறுவனத்துடன் இணைந்து, அதன் ‘இ- டெல்’, எனும் மின்சார வாகன தொலைதூர சரக்குப் போக்குவரத்து சேவைக்கு, பெண் ஓட்டுனர்களை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன், சரக்கு போக்குவரத்து சேவைக்காக, தற்போது பெங்களூருவில் 236 புதிய மின்சார ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்; இந்தியா முழுவதும் அடுத்த ஆறே மாதங்களில், 1,000 புதிய மின்சார வாகனங்களை சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மின்சார ஆட்டோக்கள், மகிந்திரா லாஸ்ட் மைல் டெலிவரி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த, ‘சோர் கிராண்டு டிவி பிளஸ்’ ஆட்டோக்களாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement