உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு கோரல் அறிவிப்பு


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில்
கோரப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள்
கோரப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல்

ஏற்கனவே அரசாங்கத்தை தவிர எதிர்க்கட்சிகள், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது
தொடர்பில் அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு கோரல் அறிவிப்பு | Local Government Election Nomination Notice

இதற்காக அண்மையில் எதிர்க்கட்சிகள், தேர்தல்கள் ஆணையாளரையும் சந்தித்து
வலியுறுத்தலை விடுத்திருந்தன.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும்
மார்ச் 20க்கு திகதிக்கு முன்னர் புதிய சபைகள் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்ற
அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன
அதிக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.