டிசம்பர் 14 காலை 9:30… ஆளுநர் மாளிகையில் நிகழவிருக்கும் 'அந்த' சம்பவம்!

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சியமைத்தபோதே, உதயநிதியின் பெயரும் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்கள் மததியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அன்பின் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.

உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி, இந்த விஷயத்தில் தங்களது விசுவாசத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே உடன்பிறப்புகள் காட்ட தொடங்கினர். ஆனால், வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையான எழுந்துவிடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுநாள்வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில்,

அமைச்சராவது குறித்த பேச்சுகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. ஸ்டாலினும் இதற்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

அதன்படி, தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருகிற 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) பொறுப்பேற்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் மெய்யநாதனின் வசம் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வரும் சிறப்புத்திட்ட செயலாக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கவனித்து வரும் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய துறைகள் உதயநிதிக்கு ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாளில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் அறை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கு தலைமை செயலகத்தில் இருக்கும் அறையை அமைச்சராகவுள்ள உதயநிதிக்கு ஒதுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், தலைமை செயலகத்தில் 10 ஆவது கேட் நுழைவு வாயில் அருகே உள்ள அறையும், 2 ஆவது மாடியில் உள்ள ஒரு அறையும் முழு வீச்சில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பதை உறுதி செய்யும்படியாக மற்றொரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி டிசம்பர் 14 (வியாழக்கிழமை) ஆம் தேதி காலை 9:30, தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.