4 கால்களுடன் பிறந்த குழந்தை… எங்கு தெரியுமா ?

குவாலியரில் உள்ள சிகந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவரை, இவரது குடும்பத்தினர் குவாலியரில் உள்ள கம்லா ராஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆர்த்திக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தை 4 கால்களுடன் இருந்ததால், உடனடியாக மருத்துவ நிபுணர்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். ஜெய் ஆரோக்கியா மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான ஆர்.கே.எஸ்.தாகட்-டும் இந்த ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் தாகட், “குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. குழந்தைக்கு கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல்படாமல் உள்ளன. கூடுதல் உறுப்புகள் வளர்வது அரிதாக நிகழக்கூடியதுதான். எனினும், இதன் காரணமாக வேறு பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது உறுதினால், குழந்தைக்கு கூடுதலாக உள்ள கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். அதன் பிறகு குழந்தை இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்” எனத் தெரிவித்தார்.

2.3 கிலோ கிராம் எடை கொண்ட குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.