Fifa World Cup 2022: Hackers வேட்டையாடும் களமாக மாறியுள்ள கால்பந்து உலகக்கோப்பை!

உலகில் அதிகம் பேர் பார்க்கக்கூடிய ஒரு விளையாட்டு போட்டி என்றால் அது FiFA கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஆகும். இதில் ஒரு முடிவாக அர்ஜென்டினா மற்றும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

ஆனால் இந்த ஒரு மாத காலம் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி என்று பார்த்தால் இந்த உலகக்கோப்பையை எப்படி வீரர்கள் பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிக்காட்டுகிறார்களோ அதே போல இணையத்தளம் மூலம் ஹாக்கர்கள் பலர் மக்களை ஏமாற்றி தங்களின் திறமையை காட்டுகிறார்கள்.

மொத்தமாக ஹாக்கர்களின் வேட்டை களமாக இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் மாறிவிட்டன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண ஆசை ஆசையாக வந்த ரசிகர்களே.

சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் ஹாக்கர்கள் ரசிகர்களிடம் அவர்களின் கைவரிசையை காட்டி அவர்களின் விவரங்கள், பணம், டேட்டா போன்றவற்றை திருடிவிடுகிறார்கள். இதுவரை நடந்த கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவு ஆன்லைன் கொள்ளை இந்த உலகக்கோப்பையில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாக்கர்கள் ரசிகர்களை பலவிதமான வடிவங்களில் ஏமாற்றியுள்ளதாக IT பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் ரசிகர்களிடம் போலியான ஆன்லைன் டிக்கெட் வழங்குவது, கிரிப்டோ பணம் ஏமாற்று, போலியான சூதாட்ட இணையதளங்கள் என்று பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள்.

Telegram பயன்படுத்தி போலியான Hayya கார்டு

இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலேயே மிகவும் புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை என்றால் அது போலியான கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் வழங்கியதே ஆகும்.

இந்த ஆன்லைன் ஹாக்கர்கள் Telegram மூலம் கால்பந்து போட்டிகளின் டிக்கெட் இருப்பதாகவும் 50 $ முதல் 150 $ வரை விலையில் இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஆசை காட்டி உண்மையான டிக்கெட் போலவே பெயர், சீட் எண், பாஸ்போர்ட் விவரம் போன்றவற்றை பதிந்து போலியான டிக்கெட் விற்று ஏமாற்றியுள்ளனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பணத்தை ‘Bitcoin’ மூலமாக வாங்கி பல லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். FIFA உலகக்கோப்பை என்பதால் ரசிகர்களும் ஒரு வேகத்தில் பணம் செலுத்தி டிக்கெட் முழுவதையும் வாங்கிவிட்டார்கள். இதற்காக போலியான ஒரு இணையத்தளத்தையே ஹாக்கர்கள் உருவாகியுள்ளார்கள்.

போலியான கிரிப்டோ பணம்

கிரிப்டோ பணம் தற்போது மிகவும் பிரபலம் என்பதால்
FIFA உலகக்கோப்பை
ஸ்பான்சர் நிறுவனமாக Crypto.com உள்ளது. இதை பயன்படுத்தி கிரிப்டோ தொகை பரிசு என்று கூறி ‘Worldcup Coin’ மற்றும் ‘World Cup Token’ போன்றவை விற்கப்படுகின்றன.

போலியான விளையாட்டு பந்தயங்கள்

போலியாக விளையாட்டு போட்டிகள் பந்தயங்கள் நடத்தி அதிலும் பணத்தை இந்த சைபர் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். இதனால் உஷாராக இருக்கவேண்டும்.

சுற்றுலா கொள்ளை

ரசிகர்கள் தங்குவதற்கு ஹோட்டல், பயணம் செய்ய விமான டிக்கெட், முக்கிய சுற்றுலா இடங்கள் என பலவற்றில் மோசடி நடத்தப்படுகின்றன. இதிலும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

போலியான விளம்பரங்கள்

ரசிகர்கள் போட்டிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாரே போட்டிகளை பார்த்தாலும் அதிலும் போலியான விளம்பரங்கள் இணையதளங்கள் மூலம் ரசிகர்களை இந்த ஹாக்கர்கள் ஏமாற்றுகிறார்கள்.

இதுபோன்ற ஒரு சைபர் தாக்குதல் அமெரிக்காவை சேர்ந்த FUBO TV ஒன்றிற்கு நிகழ்ந்துள்ளது. இது கடந்த டிசம்பர் 14 அன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது நடத்தப்பட்டது. இதனால் நேரலை போட்டிகள் தடைப்பட்டன. பிறகுதான் இது சைபர் குற்றாளிகளின் தாக்குதல் என்பது தெரிந்து தற்போது விசாரணை நடத்தப்பட்டவருகிறது.

எப்படி தப்பிப்பது?
இதுபோன்ற சைபர் கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்தது மிகவும் கடினம். ஆனாலும் நாம் முடிந்த அளவு எந்த ஒரு URL, லிங்க், இணையதளங்கள் போன்றவற்றை திறப்பதற்கு முன்னதாக ஒருமுறை சரிபார்த்து திறக்கலாம். இல்லையென்றால் எந்த ஒரு தெரியாத லிங்க் திறப்பதையும் தவிர்க்கவேண்டும். இப்படி செய்வதால் நாம் பாதுகாப்பாக இருக்கமுடியும். உங்கள் ஆசையே அவர்களின் தேவை.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.