தூய்மை பணியாளரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற உதவியாளர் கைது.!

சென்னை அருகே உள்ள நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசின் வருமானவரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ரெக்ஸ் என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும், தூய்மை பணியாளராக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு ரெக்ஸ் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணின் போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதையடுத்து கடந்த வாரம் பணிக்கு வந்த பெண்ணிடம் ரெக்ஸ் தனது அறைக்கு தண்ணீர் கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். அதன் படி, தண்ணீர் கொண்டு சென்றபோது அந்தப்பெண்ணிடம்  தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். 

அவரிடம் இருந்து தப்பித்து வந்த பெண் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரெக்சிடம் விசாரணை மேற்கொண்டு, கைது செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.