சூரத்: பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், ‘குஜராத் தேர்தல் வெற்றியானது 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். பாஜகவின் வலுவான கோட்டை குஜராத் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் புதிய கட்சிகள் களம் கண்டன.
அவர்கள் பல்வேறு உத்தரவாதங்களையும், வாக்குறுதிகளையும் கொடுத்தனர். ஆனால் அவை யாவும் முறியடிக்கப்பட்டன. குஜராத் மக்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை மட்டும் ஏற்க தயாராக உள்ளனர். குஜராத் சட்டசபை தேர்தலில் அடைந்த வெற்றியால், நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்’ என்றார்.