லண்டனில் பேண்ட் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்!


லண்டன்வாசிகள் சிலர் சுரங்க ரயில்களில் பெண் அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்தபடி பயணித்து பாரம்பரியமான இந்த செயலை இரண்டு ஆண்டுகளுக்கு போக்கு மீண்டும் புதுப்பித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் No Trousers Tube Ride-ன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை சில லண்டன்வாசிகள் பேன்ட் அணியாமல் சுரங்க ரயிலில் பயணம் செய்தனர்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இரண்டு வருட இடைவெளியைத் தொடர்ந்து லண்டனை தளமாகக் கொண்ட குழுவான The Stiff Upper Lip Society மூலம் இந்த ஆண்டு பேன்ட் அணியாமல் பயணிக்கும் நிகழ்வு பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

லண்டனில் பேண்ட் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்! | London Passengers Travel Without Pants No TrousersPA

Improv Everywhere எனும் சர்வதேச நிகழ்வை உருவாக்கிய நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட நகைச்சுவைக் குழு, முன்னதாக 19 ஆண்டுகளாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அதன் இணையதளம் தெரிவித்துள்ளது.

மார்ச் 2020-ல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சர்வதேச அளவில் “நோ பேண்ட்ஸ் சப்வே ரைடு” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முதல் “நோ பேண்ட்ஸ் சப்வே ரைடு” 2002-ல் நியூயார்க் நகரில் நடைபெற்றது, தொடக்க நிகழ்வில் வெறும் ஏழு ஆண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

லண்டனில் பேண்ட் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்! | London Passengers Travel Without Pants No TrousersGetty

ஒருவரையொருவர் தெரியாதது போல் நடிக்கும் பங்கேற்பாளர்கள், வீட்டில் தங்கள் பேண்ட்டை “மறந்துவிட்டோம்” என்று கேட்பவர்களிடம் கூறுவார்கள்.

ஜனவரி 8, 2023 அன்று மத்திய லண்டனில் உள்ள லண்டன் அண்டர்கிரவுண்டில் ஆண்டுதோறும் நடக்கும் ‘டியூப் டே ஆன் டிரவுசர்ஸ்’ (நோ பேண்ட்ஸ் சப்வே ரைடு) நிகழ்வில் மக்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு நிகழ்வில், ஏராளமான பங்கேற்பாளர்கள் அந்தந்த ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும் தங்களது பேண்ட்டை கழற்றி விட்டு, ரெயிலில் ஏறுகின்றனர். எனினும், மேல்பகுதியில் குளிர்கால ஆடைகளுடன் சாதாரணமாக காணப்படுகின்றனர்.

பங்கேற்பாளர்கள் வேடிக்கையான உள்ளாடைகளை அணிந்திருந்தனர். 

லண்டனில் பேண்ட் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்! | London Passengers Travel Without Pants No TrousersBlogs Daily

தொப்பி, கையுறை, குல்லா போன்றவற்றை வழக்கம்போல் அணிந்து கொள்கின்றனர். காலணி போன்றவற்றையும் கூட அணிந்து உள்ளனர். அதன்பின் வழக்கம்போல், ரெயிலில் அமர்ந்து புத்தகம் படிப்பது, மொபைல் போனை பார்ப்பது அல்லது இசையை கேட்பதில் அவர்கள் ஆழ்ந்து விடுகின்றனர்.

“எங்கள் நோக்கம் மக்களை சிரிக்க வைப்பதே தவிர, அவர்களை கோபப்படுத்துவது அல்ல” என்று தி ஸ்டிஃப் அப்பர் லிப் சொசைட்டி தெரிவித்துள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.