சின்ன மாமனாருடன் ஓட்டம் பிடித்த பெண்.! தாரமங்கலம் அருகே பரபரப்பு.!

சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் ஓடிய பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கோமதி (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இந்நிலையில் கோமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ன மாமனார் உறவு கொண்ட நெசவு தொழிலாளி முத்துசாமி (33) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் கடந்த பத்தாம் தேதி வீட்டிலிருந்து வெளியேறினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோமதியின் மாமியார், கோமதி என் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து கோமதி என் தாய் இது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் முத்துசாமி மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சின்ன மாமனாருடன் ஓட்டம் பிடித்த பெண்குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.