ஹங்கேரியில் கத்தியால் குத்தி போலீஸ் அதிகாரி கொலை | Police officer stabbed to death in Hungary

புடாபெஸ்ட்,-ஹங்கேரியில் கத்தி யால் குத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மூவரில், பலத்த காயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைய முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் போலீஸ் அதிகாரிகள் மூவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து, போலீசார் அவரை எச்சரிக்கும் விதமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், அதையும் மீறி அந்த நபர் ஓடியதால், அவர் காலில் சுட்டனர். பின், அவரைப் பிடித்து, கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த போலீசாருடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு பலத்த காயமடைந்த ௨௯ வயது போலீஸ் அதிகாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ஹங்கேரி போலீஸ் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.