பாட்னா: தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்த 64 அரசு மருத்துவர்கள் ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பீகார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலர் முறையான விடுப்பு எடுக்காமல் மாதக்கணக்கில் பணிக்கு வராமல் உள்ளதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்கு வராத 64 மருத்துவர்களை டிஸ்மிஸ் செய்வது என முடிவு செய்யப்பட்டது.