தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம்: பொலிஸ் விசாரணை


இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பொதுமக்களுக்கான தண்ணீர் தொட்டியில் அழுகிய அணிலியல் சடலம் கண்டுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள தண்ணீர் தொட்டியில் திங்கள்கிழமை மிகவும் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிற்பகல் 2.45 மணியளவில் வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதந்ததாக அப்பகுதியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் அவினாஷ் சாவந்த் தெரிவித்தார்.

உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்டிஎம்சி குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம்: பொலிஸ் விசாரணை | Man Found Dead In Water Tank Maharashtra Police

நாய் ஒன்று தற்செயலாக தொட்டியில் விழுந்தது மற்றும் சிறுவர்கள் குழு ஒன்று நாயை மீட்க சென்றபோது மேற்பரப்பில் மிதந்த மனிதனின் உடலைக் கண்டதாக வாக்லே எஸ்டேட் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.