முன்பதிவு தொடங்கியது புதுவை-சென்னை இடையே மீண்டும் ஏசி பஸ் சேவை

புதுச்சேரி:  புதுச்சேரி- சென்னை இடையே இசிஆர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பிஆர்டிசி வால்வோ பஸ்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ல் நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்குபின் தற்போது புதுச்சேரி-சென்னை இசிஆர் வழித்தடத்தில் பிஆர்டிசி வால்வோ பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 2 வால்வோ ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் முன்வசதி இல்லாத வால்வோ ஏசி பஸ் புதுச்சேரி பஸ் நிலையத்தில் காலை 6.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் புறப்படுகிறது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது. முன்பதிவு செய்யப்படும் வால்வோ பஸ் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் புறப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலை 9.30, மாலை 5.30க்கு புறப்படுகிறது. இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.263 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை புதிய பஸ் நிலைய பிஆர்டிசி டிக்கெட் கவுண்டர்களிலும், பஸ் இந்தியா ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.