தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் – பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கவனம் செலுத்துங்கள் என்று பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், அனைத்து மதங்களையும் சேர்ந்த விளிம்புநிலை மக்களுக்காக சேவையாற்றும்படியும்  பாஜக தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஏற்பட்ட ஊழல்கள், தேக்க நிலையை பாஜக மாற்றி புதிய அரசுமுறையை ஏற்படுத்தியது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லுமாறும் மோடி கூறினார். இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் பொற்காலத்தை அடையும் இலக்குடன் முன்னேறி வருவதாகவும் பிரதமர் கூறினார். 

நடிகர் ஷாருக்கானின் பத்தான் படத்தில் எழுந்த சர்ச்சையை சுட்டிக்காட்டிய மோடி, தேவையற்ற கருத்துகளை தவிர்க்குமாறு பாஜகவினருக்கு அறிவுரை வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.