Pongal Gift Hamper: காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6மணி வரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு புத்தாடை, பரிசு பணத்துடன் பொங்கல் பரிசுகளை வழங்கி வரும் திமுக பொதுக்குழு உறுப்பினரின் செயல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரும் , பிரபல தொழிலதிபருமான எஸ்.கே.பி.சீனுவாசனின் மனைவி திருமதி சாந்திசீனுவாசன் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மண்டல குழு தலைவராகவும் உள்ளார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கடைசி நாளான நேற்று காணும் பொங்கல் அன்று,தம் உறவினர்களை வீடுகளுக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் காணும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
காணும் பொங்கல் நாளன்று, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான எஸ்.கே.பி சீனிவாசன், தமது பகுதி பொதுமக்களை தனது இல்லத்தில் சந்திப்பத்தை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவர்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்து தெரிவிப்பார்.
அதன்படி, நேற்று காணும் பொங்கல் நாளன்று, அவரை நேரில் சந்தித்து பொங்கல் பரிசு பொருட்களை பெற அப்பகுதி பொதுமக்கள் அல்லாது அனைவரும் அவரை சந்தித்து பொங்கல் பரிசு பொருட்கள் பெற நீண்ட வரிசையில் காத்து இருந்தன. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்வில் மாலை 6மணிவரையில் தொடர்ந்து தன்னை சந்திக்க வரும் பகுதி மக்கள் மற்றும் அனைவருக்கும் புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொங்கல் பரிசினை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தப்ப்போது, அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அவரது ஆதரவாளர்கள் வழங்கியதை, அனைவரும் பாராட்டுகின்றனர்.