‘அதெற்கெல்லாம் பயப்படுகிற ஆளா நான்.!’ – இம்ரான் கான் பளீர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார்.

சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 184.79 ஆக உயர்ந்தது.

இதனால் அங்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளும் மேற்கொண்டன. பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லை. இதனால் அவர், எப்போது வேண்டுமானாலும் பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

இதனிடையே, பிரதமர் இம்ரான்கானை பதவிநீக்கம் செய்வதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இம்ரான் கானுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார். இதற்கிடையே ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அதை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உலகத்தை இந்தியா ஆள்கிறது – எல். முருகன் பெருமிதம்…!

இந்தநிலையில் தன்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இங்கிலாந்து நாட்டின் ‘தி நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘பொதுத் தேர்தலுக்கு முன்னதாக என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆறு மாத குழந்தை சுட்டுக் கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அதற்காக ஆளும் கூட்டணி அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக என் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதுபுது வழக்குகளை பதிது செய்து வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற அவர்களால் எந்த வழக்கும் போட முடியவில்லை’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.