தமிழகத்தில் இன்று (21.01.2023) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21.01.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேலூர்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வேலூர் மாவட்டத்தில்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருவராஜபாளையம், சின்ன பள்ளி குப்பம், ஓ.ராஜாபாளையம், வேப்பங்குப்பம், ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு, ஆசனம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, அங்குநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்

சிவன்மலை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.