ஈரோடு: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நான் போட்டியிட வில்லை, ஆனால் எனது மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா எம்எல்ஏ மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால், மீண்டும் அந்த தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்குவதாக திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து […]