எங்கள் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டோம்; திமுகவுக்கு அவரே முடிவு கட்டுவார் – ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
திமுக
ஆட்சியில் வீட்டு வரி சொத்து வரி காலி மனை வரி வரி குடிநீர் வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர்
ஸ்டாலின்
வெற்றி பெற்றதால் திமுக கட்சிக்கும் திமுக தொண்டர்களுக்கும் லாபமில்லை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே லாபம் என்றார்.

மேலும், சாஸ்தா கோயில் அணையை உடைத்து மண் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இதற்கு பொதுமக்கள் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் விதைத்த இடத்தில் தற்போது அறுவடை செய்து வருகிறார். திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள் மகிழ்ச்சியோடு இல்லை. அனைவரும் வெறுப்புடன் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவது வேலையாக செய்து வருகின்றனர்.

யாருக்கும் எனது மனசாட்சி படி 10 பைசாவுக்கு கூட துரோகம் செய்ததில்லை. கடவுள் மேல் நம்பிக்கை உள்ள நாங்கள் பயந்து கொண்டிருக்கிறோம். திமுகவினர் கடவுளையும் நம்புவதில்லை, மனிதர்களையும் நம்புவதில்லை, அதனால் தான் அனைத்து தவறுகளையும் செய்கின்றனர்.

அதிமுகவினர் வேலையை தற்போது தமிழக ஆளுநர் செய்து வருகிறார். பிகாரில் உளவுத்துறை அதிகாரியாக வேலை பார்த்தவர் திமுக கொண்டுவரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில்லை எனவே எங்களது பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டோம் திமுகவுக்கு முடிவு கட்டும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார்.

கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி ஆண்டுகளை 5லிருந்து மூன்றாக குறைக்க முயன்ற திமுகவுக்கு பதிலடியாக தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 22 ஆயிரம் பேருந்துகளில் தற்போது 8000 பேருந்துகள் பழுதடைந்து விட்டது சென்னைக்குள் 3500 பேருந்துகளில் இன்னொரு பேருந்துகள் சக்கரம் இருக்கை இன்றி நிறுத்தப்பட்டுவிட்டது. ராஜபாளையத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு புத்தாண்டு பரிசாக திமுக அரசு வேலையை விட்டு நீக்கியது. செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். அதிமுக ஆட்சியே பரவாயில்லை என்ற நிலையில் அனைவரும் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5% ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரியில் தற்போது பயின்று வருகின்றனர்.

எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாயா, பொங்கல் சமயத்தில் கரும்பு கொடுக்க இயலாத நிலையில் இது தேவையில்லாதது. கடந்த ஆட்சியில் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அனைத்தும் கொடுத்து ரூபாய் 2500 வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆட்சியில் கரும்பு கூட கொடுக்கவில்லை. அதிமுக போராட்டம் அறிவித்த பின்னரே கரும்பும் வழங்கப்பட்டது.

தற்போதுள்ள அதே வரி பணத்தில் தான் நாங்களும் ஆட்சி நடத்தினோம். தாலிக்கு ஒரு சவரன் தங்கம் ரூபாய் 50,000 ரொக்கமாக கொடுத்தது அதிமுக அரசு. தற்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.

மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது சீருடைகள் தற்போது குறைத்து வழங்கப்படுகிறது. சென்னையில் அம்மா உணவகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டது .ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்திய அம்மா மினி கிளினிக் அனைத்தும் தற்போது மூடப்பட்டு விட்டது.

இத்தனையும் மூடிய அரசு மக்களுக்கான எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. ராஜபாளையம் தொகுதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்படுகிறது.

விரைவில் தேர்தல் வரவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பொது சேவைக்கு வந்திருக்கும் நபர்களுக்கு சிறிது மனசாட்சி தேவை இல்லாதவர்களை தூக்கி எறிய மக்கள் தயங்க கூடாது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.