நகைக்கடை சுவரில் துளையிட்டு தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் சேகர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அவர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்.
இந்நிலையில் நேற்று இரவு நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல் கடையின் சுவரில் துளையிட்டு தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றது. இன்று கடையை திறந்த உரிமையாளர் சேகர் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொள்ளை சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையில் இருந்து 30 பவுன் தங்க நகை 25 கிலோ வெள்ளி நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடி சென்றதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in