வேதாரண்யம்: கடல் சீற்றமாக காணப்படுவதால் நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தங்களது பைபர் படகு மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வெளியூர் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலே முடங்கிப் போய் உள்ளனர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.