60 வயது ஆசிரியரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய காவலர்கள்! பதறவைக்கும் வீடியோ

பீகாரில் 60 வயதான முதியவரை பெண் காவலர்கள் இருவர் சேர்ந்து லத்தியால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவல் கிஷோர் பாண்டே. 60 வயதான இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. ஆசிரியர் நவல் கிஷோர் சாலையில் விழுந்ததால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கைமூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த பெண் காவலர்கள் 2 பேர் ஆத்திரமடைந்தனர். பின்பு, அவர்கள் வைத்திருந்த லத்தியால் நவல் கிஷோரை வயதானவர் என்று கூட பாராமல் நடுரோட்டில் சராமாரியாக அடித்துள்ளனர். இதனால் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் அலறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

image
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பெண் காவலர்கள் இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

#Bihar: Two women policemen lathicharged an elderly man riding a bicycle, this is a case of Bihar’s Kaimur district, DCP ordered an inquiry

@bihar_police
#ViralVideo #LatestNews #India pic.twitter.com/KjGojdwOxK
— Siraj Noorani (@sirajnoorani) January 22, 2023

இதனை அடுத்து இந்த சம்பவம் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலீத் மோகன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு இருவரையும் மூன்று மாதங்களுக்கு பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.