ஆப்பிள் iPhone 15 Pro புதிய அம்சத்துடன் இந்த ஆண்டு வெளியாகும்!

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக இருக்கக்கூடிய ஆப்பிள் நிறுவனம் உலகின் அதிக மதிப்புமிக்க டெக்னாலஜி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் விற்பனை செய்யும் ஆப்பிள் ஐபோன் உலகளவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சிறந்த போனாக உள்ளது.

Google மற்றும் Samsung போன்ற மிகப்பெரிய ஸ்மார்ட்போன் ஜாம்பவான் நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஐபோன்களை விற்பனை செய்கிறது. அப்படி இந்த நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 pro மாடலை விரைவில் வெளியிடவுள்ளது.

இந்த புதிய மாடல் ஐபோன் 15 தற்போதைய ஐபோன் 14 ப்ரோ மாடலை விட அகலம் குறைவாகவும், கர்வ் Bezel உள்ளது. இதனால் பார்ப்பதற்கு அதன் Apple Smartwatch போன்று இருக்கும். அளவு என்று பார்த்தால் தற்போதைய ஐபோன் 14 மாடலின் அதே அளவு இருக்கும்.

இதன் Bezel சிறியதாக இருப்பதால் முந்தய மாடல் போனிற்கும் இதற்கும் உள்ள வித்யாசம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் டிஸ்பிலே அளவு என்று பார்த்தால் ஐபோன் 14 ப்ரோ மாடலின் அதே அளவில் இருக்கும்.

முக்கிய அம்சமாக இந்த ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் முதல் முதலாக periscope கேமரா வசதி உள்ளது. இதில் Optical Zoom வசதியும் இடம்பெறும். இதில் Folded Zoom வசதி முதல் முறையாக இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய Periscope lens ஆராய்ச்சிக்காக தென் கொரியாவை சேர்ந்த LG Innotek மற்றும் Jahwa Electronics ஆகிய நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து இதற்காக OIS Actuator உருவாக்கிவருகிறது. இதே வசதியை அந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வெளியிடவுள்ள ஐபோன் 16 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்யவுள்ளது.

Thumb Image Source:
VNchocoTaco

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.