ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் இன்று முதல் விருப்பமனு வழங்கப்படும் -இபிஎஸ்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் இன்று முதல் விருப்பமனு வழங்கப்படும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல் வருகின்ற 26-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் விண்ணப்பக் கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.