ஒரே ஒரு மாணவனுக்காக தினமும் 12 கி.மீ பயணம் செய்து வரும் ஆசிரியர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணேஷ்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில், அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அனைவருக்கும் கல்வி என்ற அரசு திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளியில் கார்த்திக் சேகர் என்ற மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு மதிய உணவு உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது.

கிஷோர் என்ற ஆசிரியர் சுமார் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.இவர் தினமும் 12 கி.மீ பயணம் செய்து சிறுவனுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு மாணவர், ஒரு ஆசிரியரை வைத்துக்கொண்டு பள்ளி தொடர்ந்து சிறப்பாக நடப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டுகின்றனர்.

இந்த ஆசிரியருக்கும், மாணவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.