சமீபகாலமாக, விமானங்களில் பயணிகளால் அரங்கேறும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. அண்மையில், ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணிமீது ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம், கடந்த டிசம்பர் 10-ம் தேதி இண்டிகோ விமானத்தில் எமெர்ஜென்சி கதவை பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் ஆகியவை பேசுபொருளாகின.
இந்த நிலையில், இண்டிகோ விமானத்தில் ஆண் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் செய்த செயல், பலரையும் நகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் விமானப் பணிப்பெண்ணிடம் அந்தப் பயணி, “நான் குட்காவை வெளியில் துப்ப வேண்டும். அதனால் ஜன்னலைத் திறந்துவிடுங்கள்” எனக் கிண்டலாகக் கூறுகிறார். இதைக் கேட்ட பணிப்பெண் சட்டெனச் சிரித்துவிட்டார். அருகிலிருந்த சக பயணிகளும் சேர்ந்து சிரித்தனர். இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலரும் கிண்டலாக கமென்ட்டுகள் பதிவிட்டுவருகின்றனர்.