வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் வெட்டி நகை, பணம் கொள்ளை-முகமூடி கொள்ளையன் வெறிச்செயல்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே பட்டப்பகலில் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையன், தனியாக இருந்த பெண்ணை கத்தியால் வெட்டி 17 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் காய்கறி வியாபாரத்திற்காக வெளியேச் சென்ற நிலையில் அவரது மனைவி மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த முகமூடி அனிந்த மர்ம நபர் ஒருவர்  வீட்டின் மாடி வழியாக  உள்ளே நுழைந்துள்ளான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் மாலதி அணிந்திருந்த நகையை பறிக்க முற்பட்ட போது, மாலதி தப்பியோட முயன்றதால் கத்தியால் அவரின் காலை வெட்டியுள்ளான். இதனிடையே  மர்ம நபர் பீரோவை திறந்து அதிலிருந்து 17 சவரன் தங்க நகைகள்,ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில்  தப்பிச் சென்றுள்ளார். 

வெட்டுக்காயத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து கூச்சலிட்ட மாலதியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.