திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு அரை நிர்வாண ஊர்வல தண்டனை| Half-naked procession punishment for children involved in theft

சண்டிகர்: ஹரியானாவில் கடையில் திருடிய குற்றத்திற்காக மூன்று சிறுவர்களை, அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தண்டனை விதித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு யமுனா நகரின் அருகே கர்வான் கிராமத்தில் உள்ள இரும்பு கடையில் இருந்த பொருட்களை மூன்று சிறுவர்கள் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்தில் கடையின் உரிமையாளர் புகார் தெரிவித்தார்.

இதை விசாரித்த பஞ்சாயத்து தலைவர்கள், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து வர உத்தரவிட்டனர்.

பஞ்சாயத்தார் நடத்திய விசாரணையில், கடையில் திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூன்று பேரையும், அரை நிர்வாண கோலத்தில் அங்குள்ள தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும்படி பஞ்சாயத்து தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த ஊர்வலத்தை சிலர் ‘மொபைல் போனில்’ ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.