திருத்தணி முருகன் கோயிலில் மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த பெண்ணை முருக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பி.உசிலம்குளத்தைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி, உறவினர்களுடன் நேற்று கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தார்.

அப்போது அவரது பின்னால் வந்த நெல்லையைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் மூதாட்டியின் கழுத்தில் இருந்து இரட்டை வடை தங்க சங்கிலியை அறுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்து மூதாட்டி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக சாந்தியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.