திண்டுக்கல் சிறுமலை மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

திண்டுக்கல்: சிறுமலை மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். 18-வது கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தில் பேருந்து கவிழந்தது. பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக விபத்து என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 15 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.