நியூசிலாந்து – இந்திய அணிக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் 3ஆவது மற்றும் இறுதி போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2 ஆவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய -நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று (24) பிறபகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் இன்று மோதுவது 116 ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 115 போட்டிகளில் இந்தியா 57 போட்டியிலும், நியூசிலாந்து 50 போட்டியிலும் வெற்றி பெற்றன.