சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் சென்னை டிபிஐவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 2 லட்சம் மாற்றுத் திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க 3 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 23-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2-வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளாக பணி அனுபவம் கொண்டஎங்களை கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய தமிழகஅரசு முன்வர வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’என்றனர்.