Vijay: அது என்னோட தப்பா இருக்கலாம்: விஜய் குறித்து அப்பா எஸ்.ஏ.சி. சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர். பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.

விஜய் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது. எஸ்.ஏ. சி தற்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் , சரவணன், ரோகினி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் இந்தப்படம் தொடர்பான ப்ரமோஷனுக்காக அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில் விஜய் எதிர். அவருக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு அவர் தளபதியாக மாறியிருக்கலாம். ஆனால் அவர் எனக்கு இன்றும் குழந்தைதான்.

அவரை இப்போதும் குழந்தையாக நினைப்பதுதான் எங்களுக்குள்ளான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். உங்க பார்வைல சொல்லனும்னா, அவரை இன்னும் குழந்தையாக நினைப்பது என்னோட தவறாக கூட இருக்கலாம். ஆனால் நான் முதலில் நேசிப்பது சினிமாவைதான். அதன்பிறகு விஜய். அடுத்துதான் என் மனைவி ஷோபா. கடவுள் இரண்டு பிள்ளைகளை கொடுத்து ஒருவரை எடுத்துக்கொண்டார். அதனால் எனக்கு ஒரு பிள்ளைதான் என்று ஆகிவிட்டது.

Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவரின் அடுத்த பட ரிலீஸ்: வெளியான அதிரடி அறிவிப்பு.!

அதனால் மொத்த காதலையும் அவர் ஒருவர் மீதுதான் வைக்க முடியும். நான் விஜய்யை எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. அதேபோல் விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவுடன் அவரை அறிமுகபப்டுத்த ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் கதையை எழுதினேன். அந்த படத்தில் நடித்து முடித்தவுடன், நான் ஷோபாவிடம் சொன்னேன். இந்த படம் வெற்றியாகுதோ இல்லையோ உன் பிள்ளை பெரிய ஹிரோவாகிவிடுவான் என்று சொன்னேன்.

அதேபோல், படத்தின் முதல் ஷாட் ராதா ரவி ஸ்ரீவித்யாவுக்கு இடையில் விஜய் டைலாக் பேச வேண்டும். அதை ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அப்போது ராதாரவி இவன் பெரிய ஆளாக வருவான் என்று சொன்னார். அவர் சொன்னபடியே இப்போது நடந்துள்ளது என்று கூறியுள்ளார். விஜய் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்துள்ள இந்தப்பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy 67: ‘தளபதி 67’ அப்டேட் கொடுத்த லோகேஷ்: அப்செட்டான விஜயண்ணா ரசிகர்கள்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.