‘என்னை பிரதமராக்கினாலும் பாஜகவில் சேரமாட்டேன்’ – சித்தராமையா உறுதி.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%),
காங்கிரஸ்
80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது.

இதன் பின்னணியில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி எம்.எல்.ஏக்கள் விலை போன சம்பவமும், இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிகழ்வும் அரங்கேறின. அதன்பிறகு எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என இரண்டு பாஜக முதல்வர்கள் பதவி வகித்தனர். இந்த சூழலில் தான் 2023 சட்டப்பேரவை வரவுள்ளது. கடந்த தேர்தலை போல இல்லாமல் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்முறை கூட்டணி கணக்குகள் மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் பாஜக கைகோர்க்குமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என அக்கட்சி தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனவே பாஜக தனித்து களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. இந்தநிலையில் என்னை பிரதமர் ஆக்கினாலும் பாஜகவில் சேரமாட்டேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘அவர்கள் (பாஜக) என்னை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ஆக்கினாலும் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் செல்லமாட்டேன். என் சடலம் கூட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் செல்லாது.

நான் இந்து விரோதி என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் சி.டி.ரவி என்னை சித்தரமுல்லா கான் என்று அழைக்கிறார். ஆனால் காந்திஜி ஒரு உண்மையான இந்து. காந்திஜியைக் கொன்ற கோட்சேவை வணங்கும் இந்துக்கள் தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள். நாங்கள் ஆட்சியில் இருந்த போது அனைவருக்குமான உணவுபாதுகாப்பை உறுதிபடுத்தினோம். ஆனால் பாஜக அதை செய்ய தவறிவிட்டது.

நான் முதல்வராக இருந்தபோது ஏழைகள் அனைவருக்கும் அன்னபாக்யா யோஜனா திட்டத்தை கொண்டு வந்தேன். பசவ ஜெயந்தி அன்று நான் உறுதிமொழி எடுத்தேன். ஒரு மணி நேரத்திற்குள், உணவு, விவசாயம் மற்றும் பால்வளத்தின் பாதுகாப்பு அடையப்பட்டது. அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளோம்.

முகலாயர் தோட்டம் பெயர் மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்!

இதற்கு முன் 7 கிலோ அரிசி இலவசம். ஆனால் இப்போது பாஜக 5 கிலோ செய்துள்ளது. அடுத்ததாக, 10 கிலோ அரிசி தருவோம், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் மாதம் ₹2,000 வழங்குவோம். ஆண்டுக்கு ₹ 24,000 வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணம் எல்லாம் எங்களுடையது அல்ல, மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் செலவு செய்துள்ளோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.