நடுவானில் விமான கழிவறையில் சிகரெட் பிடித்தவர் கைது| Man arrested for smoking cigarette in flight toilet in mid-air

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொச்சி: நடுவானில் விமான கழிவறைக்குள் சிகரெட் பிடித்ததாக கேரளாவைச் சேர்ந்த 62 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து போலீசார் கூறியது, தனியார் விமானம் கடந்த ஜன.29-ம் தேதி கொச்சியிலிருந்து வழக்கமாக புறப்பட்டுச் சென்றது. அப்போது நடுவானில் விமான கழிவறையில் 62 வயது நபர் சிகரெட் பிடித்ததாக விமான பணியாளர்கள் புகார் கூறினர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அந்த நபர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுகுமாறன் 62 என தெரியவந்தது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.