மழை நீர் வடிகாலை சேதப்படுத்திய புதிய திருமண மண்டபத்திற்கு ரூ.64 ஆயிரம் அபராதம்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயை உடைத்து அனுமதியின்றி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திய தனியார் திருமண மண்டப உரிமையாளரிடம் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அங்குள்ள பாரதிதாசன் வீதியில் 8 இன்ச் பிளாஸ்டிக் பைப் செல்லும் அளவிற்கு பள்ளம் தோண்டிய தனியார் திருமண மண்டப நிர்வாகத்தினர், புதிய மழைநீர் வடிகாலை சேதப்படுத்தி மண்டபத்தின் கழிவுநீரை வெளியேற்றினர்.

இதனையடுத்து, திறந்த 2 நாட்களில் அந்த மண்டபத்தை இழுத்து பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்த பின்னர் திறந்து விட்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.