ஓட்டல் ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு| Mobile phone seized from hotel employee

வில்லியனுார் : சேதராப்பட்டு அருகே ஓட்டல் ஊழியரிடம் மொபைல் போனை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கரசூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யனார் மகன் ேஹமச்சந்திரன்,19; வில்லியனுாரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு மொபைல் போனில் பேசியபடி பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

துத்திப்பட்டு அருகே சென்றபோது, பின்னால், பைக்கில் வந்த இரு நபர்கள், ேஹமச்சந்திரனின் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து ேஹமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.