Budget 2023: சுகாதார துறையின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள்!

மத்திய பட்ஜெட் 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கையில், சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

சுகாதாரத் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள்:

1. 2014 முதல் தற்போதுள்ள 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவப்படும்.

2. 102 கோடி பேருக்கு 220 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

3. 2047 க்குள்  Sickle-Cell இரத்த சோகையை முற்றிலுமாக ஒழிக்க தனிப்பிரிவு அமைக்கப்படும்  . பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பகுதிகளில் 0-40 வயதுக்குட்பட்ட 7 கோடி பேருக்கு பரிசோதனை செய்து, ரத்த சோகை நோயை ஒழிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றார் சீதாராமன்.

4. மருந்துத் துறையில் ஆராய்ச்சிக்கான புதிய திட்டம் வகுக்கப்படும். தொழில்துறையினர் ஆராய்ச்சியில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்படும்.

5. தேர்ந்தெடுக்கப்பட்ட ICMR ஆய்வகங்களில் உள்ள வசதிகள் பொது மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகளின் ஆராய்ச்சிக்குக் கிடைக்கும்.

6. சிறந்த கல்வி நிறுவனங்களில் மூன்று செயற்கை நுண்ணறிவு மையங்கள் (AI) அமைக்கப்படும், முன்னணி தொழில்துறை வீரர்கள் பல துறைசார் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் பங்குதாரர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிநவீன செயலிகளை உருவாக்கி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் நீடிக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளை உருவாக்குவார்கள்.

       கடந்த ஆண்டு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 39,44,909 கோடியை செலவிட அரசாங்கம் முன்மொழிந்தது, இது 2021-22 இன் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 4.6% அதிகமாகும். 2021-22ல், மொத்த செலவு பட்ஜெட் மதிப்பீட்டை விட 8.2% அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், அதிக ஒதுக்கீடுகளைக் கொண்ட முதல் 13 அமைச்சகங்களில், 2022-23 ஆம் ஆண்டில், தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் (93%), அதைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (52%) மற்றும் நீர் வளத்துறை அமைச்சகம் (25%)  என ஒதுக்கீட்டில் அதிக சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது.

இவற்றில், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு  2022-23ல் அதிகபட்சமாக, 5,25,166 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ரூ. 2022-23ல் 86,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் கீழ், தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான திறந்த தளம் நிறுவப்பட்டு, தேசிய தொலைத் தொடர்பு மனநலத் திட்டம் தொடங்கப்பட்டது என்று அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.