சென்னை: கோயில் திருப்பணிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் “திருக்கோயில் திருப்பணி கையேடு” வெளியிடப்பட்டு உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்துவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கி வருகிறது. அனைத்துத் திருக்கோயில்களையும் முறையாகப் பராமரித்து, பாதுகாத்து மேம்படுத்துவது இத்துறையின் முக்கியமான […]