தமிழகத்தை உலுக்கிய மரணம்..!! இந்த கொடுமை எப்போ தீருமோ..?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனராஜின் 5 வயது மகள் ஹவினா. இவர், ஆலங்குளம் – துத்திகுளம் சாலையில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற ஹவினா, மாலையில் பள்ளி வேனில் கரும்பனூருக்கு திரும்பினார். வேனில் இருந்து ஹவினா இறங்கியதை கவனிக்காத ஓட்டுநர், வாகனத்தை திருப்பியபோது குழந்தை சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், வாகனத்தின் ஆவணங்களை சோதனையிட்ட போது, அதில் வாகனத்தின் ஆயுள், இன்சூரன்ஸ் மற்றும் பெர்மிட் காலாவதியாகி விட்டது என்பதும், இந்த வாகனம் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல ஆர்டிஓ அலுவலகத்தில் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து வாகன ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகியுமான ஸ்ரீராம்குமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.