பிப்ரவரி 6ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

வரும் பிப்ரவரி 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழா வரும் பிப்ரவரி 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மார்ச் 11ம் தேதி பணி நாளாக செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.