வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தின்படி, வரும் 2070-ம்ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 100% தடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது புதைபடிவ எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ‘பசுமை வளர்ச்சி’ என்ற தலைப்பில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.