ChatGPT ஆப் போட்டியாக Google புதிய AI வெளியிடும்! சுந்தர்பிச்சை அறிவிப்பு!

OpenAI நிறுவனத்தின் ChatGPT செயலி அறிமுகம் ஆன சில மாதங்களில் 100 மில்லியன் பயனாளிகளை பெற்றது. முன்பு சோதனையில் இருந்த இந்த செயலி இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை எதிர்த்து இப்போது Google நிறுவனம் அதேபோன்ற AI செயலி ஒன்றை வெளியிடப்போவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுந்தர் பிச்சை “கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக கூகுள் நிறுவனம்
Artificial Intelligence எனப்படும் AI
ஆராய்ச்சியில் இறங்கியது. மேலும் AI உருவாக்கத்தில் சந்தையில் தலைசிறந்த நிறுவனமாக கூகுள் இருக்கிறது.

இதில் முதல்கட்டமாக LaMDA மற்றும் PaLM ஆகிய AI கருவிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவற்றின் மூலமாக நாம் நேரடியாக AI உடன் பேசமுடியும் என்று கூறியுள்ளார். முதலில் சோதனை ஓட்டமாக இந்த AI அறிமுகம் செய்யபடும். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே முதலில் பயன்படுத்தும் வகையில் அது இருக்கும். இதை AI உருவாக்குபவர்கள், கூகுள் திறனாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோர் பயன்படுத்த முதல் உரிமை அளிக்கப்படும்.

பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் வரும். முன்பு இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த
Open AI நிறுவனத்தின் ChatGPT AI
இப்போது மாதம் 20டாலர் செலுத்தும் சந்தா தொகையுடன் அறிமுகம் ஆகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தேடல் கருவியை விட இந்த ChatGPT மக்கள் தேடலுக்கு மிகவும் விரைவாக பதில் தருவதும் அதே நேரம் மனிதர்களுடன் பேசுவது போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது. இதன் காரணமாகவே பலர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இது தங்கள் நிறுவனத்திற்கே ஆபத்து என்பதை உணர்ந்து கூகுள் நிறுவனம் தற்போது இந்த AI உருவாக்கத்தில் வேகம் காட்டிவருகிறது. எதிர்காலத்தில் இந்த AI மூலமாக அனைத்தும் நடக்கும் என்பது இந்த ChatGPT வருகைக்கு பிறகு உலகம் உணர்ந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.