அதிர்ச்சி! கர்ப்பிணி வயிற்றில் எட்டி உதைத்த அண்ணி!!

சென்னையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை அவரது அண்ணி வயிற்றில் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கவுசல்யா (32) என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது அண்ணன் விஜயசிம்மனுக்கும், அண்ணி துர்காபாய் (36) என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களின் விவாகரத்து வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துர்காபாயும், அவருடன் இரண்டு பேரும் சேர்ந்து கவுசல்யா வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த விவாகரத்து பிரச்னைக்கு கவுசல்யா தான் காரணம் என்று கூறி அவர் வயிற்றில் எட்டி உதைத்தனர்.

அதிர்ச்சியில் உறைந்த கவுசல்யா கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

இதனையடுத்து கவுசல்யா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் துர்காபாய் தகராறு செய்து தாக்கியது உறுதி செய்யப்பட்டது. எனவே துர்காபாயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள பப்லு, குஷிதா பானு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.