ஆசிய கோப்பை தொடர்: இந்தியா புது முடிவு| Asia Cup Cricket: India New Results

கராச்சி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரப்போகும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தொடர் அங்கு நடந்தால் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என இந்தியா அறிவித்தது. தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக தீர்வு காண கடந்த பிப்.4-ம் தேதி பஹைரனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகள், பைனலில் இந்தியா நுழைந்தால் அதனையும் துபாயில் நடத்துவது, எனவும் மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடத்துவது என பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.