நெல்லை: அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அய்யா வைகுண்டசாமி அவதார திருநாள், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். இதையொட்டி, நெல்லை மாவட்டத்துக்கு மட்டும், மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு […]