குஜராத்தில் நள்ளிரவில் வீதியில் வலம் வந்த சிங்கக் கூட்டம்| A herd of lions roamed the streets at midnight in Gujarat

ஆமதாபாத், குஜராத்தில் நள்ளிரவு நேரத்தில் வீதியில், எட்டு சிங்கங்கள் ஜாலியாக உலா வந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில், நள்ளிரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சத்தில் ஆள் அரவமற்ற குடியிருப்பு பகுதியின் வீதியில், எட்டு சிங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஜாலியாக நடந்து செல்கின்றன.

இந்த சம்பவம் குஜராத்தின் எந்த நகரத்தில், எப்போது நடந்தது என்ற விபரம் தெரியவில்லை.

சிங்க கூட்டம் நடந்து சென்ற இடத்துக்கு அருகில் மறைந்திருந்து ஒருவர், இந்த வீடியோவை எடுத்துஇருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், ‘மற்றொரு நாள்; மற்றொரு பெருமை’ என்ற வாசகத்தையும் நந்தா பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பலரும், தங்கள் ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.