சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கோவை செல்கிறார். அன்று இரவு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 18ந்தேதி மகா சிவராத்திரியன்று காலை […]